Thursday, August 27, 2009

என் கவிதைகள் !!

முட்களின் நடுவே
வாசனை ரோஜாவாய் இருக்க ஆசை
தண்ணீரின் நடுவே
தனியாய் தாமரையாய் இருக்க ஆசை
இருளின் நடுவே
வானில் நிலவாய் இருக்க ஆசை

கஷ்டங்கள் , தனிமைகள் , சோதனைகளில்
இயேசுவே நீர் என்னோடு இருக்க ஆசை !!

-----------------------------------------------------------------

வழி விலகும் நட்சத்திரமாய் அல்ல ,
வழி காட்டும் நட்சத்திரமாய் மாற

அணைந்து போகும் விளக்காய் அல்ல ,
அணையாத ஜோதியாய் திகழ

தேய்கின்ற நிலவாய் அல்ல ,
பௌர்ணமி நிலவாய் பிரகாசிக்க

உலக மனிதனாய் அல்ல ,
தேவ சாயலாய் உருவாக்கப்பட

அன்பர் இயேசு அழைக்கிறார் உன்னை !!

------------------------------------------------------------------

1 comment:

Unknown said...

hmm,kavithai ellam nalla irukku